திருப்பனந்தாளிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது கீழக்காட்டூர் வரதராஜப் பெருமாள் திருக்கோயில் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள அனுமனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. தாரு என்ற அபூர்வமான மரத்தில் உருவானதால், இந்த அனுமனுக்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்குப் பதில் தினமும் சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது. இவரை வழிபட, மனதில் உள்ள தீய சக்திகள் அழியும் என்பது ஐதீகம்.