ராமாயணம் தலைசிறந்த பக்தி காவியம். ஸ்ரீமத்பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது பக்தி வகைகளும் ராமாயணத்தில் ஒன்பது பாத்திரங்கள் மூலம் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளது. கேட்டலுக்கு அனுமன், பாடலுக்கு வால்மீகி, நினைப்பதற்கு சீதை, பாத சேவைக்கு பரதன், அர்ச்சிப்பதில் சபரி, வணங்குவதில் விபீஷணன், தொண்டு புரிவதில் லட்சுமணன், நட்புக்கு சுக்ரீவன், தன்னையே அர்ப்பணிப்பதில் ஜடாயு என ஒன்பது வித பக்தியும் கதைப் பாத்திரங்கள் மூலமாக விளக்கப்பட்டுள்ளன.