Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் விநாயகருக்கு 108 பவுனில் ... திருமண விசேஷ நிகழ்ச்சி அம்மனுக்கு முதல் அழைப்பு திருமண விசேஷ நிகழ்ச்சி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்தலசயன பெருமாள் குளத்தை தூர் வார பக்தர்கள் வலியுறுத்தல்
எழுத்தின் அளவு:
ஸ்தலசயன பெருமாள் குளத்தை தூர் வார பக்தர்கள் வலியுறுத்தல்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2017
12:06

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பராமரிப்பின்றி சீரழிந்து வரும், ஸ்தலசயன பெருமாள் கோவில் குளத்தை, துார் வாரி பராமரிக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், 108 வைணவத் தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. இதன் புனித தீர்த்தமாக, புண்டரீக புஷ்கரணி என்ற திருக்குளம், கடற்கரை சாலையில் உள்ளது. புண்டரீக முனிவர், குளத்தில் மலர்ந்த தாமரை மலரை, இறைவனுக்கு சூடி அருளாசி பெற்றது, இத்தலத்தின் வரலாறு.இறைவன், முனிவருக்காக, கைகளால் கடல்நீரை இறைத்து காட்சியளித்த இத்தலத்தில், கடலிலும், திருக்குளத்திலும் புனித நீராடி, இறைவனை தரிசிக்க வேண்டியது ஐதீகம். இக்குளம், 2 ஏக்கர் பரப்பில், மையத்தில் 25 ச.அடி., பரப்பு நீராழி மண்டபத்துடன் அமைந்துள்ளது.

இயற்கை நீரூற்று மணற்பரப்பில் அமைந்த குளம், 25 ஆண்டுகளுக்கு முன், வற்றாமல் நீர் நிரம்பியிருக்கும். நாளடைவில், குளத்தைச் சுற்றிலும் கட்டடங்கள் உருவாகி, இதன் நீர்வரத்து பாதைகள் அடைபட்டு, குளத்தின் நீர்வரத்து தடைபட்டும், குளம் துார்ந்தும், சேற்று சகதியுமாகவும் சீரழிகிறது. மழைக்காலத்தில் தேங்கும் நீர், சில மாதங்களில் வறண்டு விடுகிறது. குளத்தில் படர்ந்த கொடிகள், வறட்சியின் போது மக்கி, மீன்கள் இறந்து துர்நாற்றமடிக்கிறது. குளத்தில், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பையும் குவிக்கப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, குளத்தில் அமைக்கப்பட்ட பழங்கால படிகளும், சரிந்து ஆபத்தாக உள்ளது. புனித தீர்த்த குள அவலத்தால் அதிருப்தியடைந்துள்ள பக்தர்கள், குளத்தை துார் வாரவும், படிகளை புதுப்பித்து மேம்படுத்தவும், கோவில் நிர்வாகத்தை வலியுறுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar