Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் ... கோவை வரதராஜபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோவை வரதராஜபுரம் மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நூறாவது விக்கெட்டும் சாய்ந்தது: பாண்டவர் அணி வெற்றி
எழுத்தின் அளவு:
நூறாவது விக்கெட்டும் சாய்ந்தது: பாண்டவர் அணி வெற்றி

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2017
12:06

ஆர்.கே.பேட்டை: கவுரவர்களில் மூத்தவரான துரியோதனன் நேற்று நடந்த, 18ம் நாள் குருஷேத்திர போரில், பீமசேனனால் வீழ்த்தப்பட்டார். வெற்றி பெற்ற பாண்டவர்களில் மூத்தவரான தர்மராஜாவுக்கு இன்று மகுடம் சூட்டப்படுகிறது.ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார், திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. 25ம் தேதி, பகாசூரன் குப்பம் நிகழ்ச்சியுடன் தெருக்கூத்து துவங்கியது. அர்ச்சுனன் தபசு, விராட பருவம், அரவான் கள பலி, ஆகிய முக்கிய நிகழ்ச்சிகளில், நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.பஞ்சபாண்டவர்கள் உடனான குருஷேத்திர போரில், தன் சகோதரர்கள் 99 பேரையும் இழந்த துரியோதனன், நேற்று காலை, தானே களத்தில் இறங்கி போரிட்டார். நீண்ட யுத்தத்திற்கு பின், பீமசேனன், துரியோதனனை கொன்றார்.

கவுரவர்கள் சபையில், துரியோதனனால், அவமானப்படுத்தப்பட்ட திரவுபதியம்மன், துரியோதனன் குருதியை எடுத்து, தன் கூந்தலில் தடவி சபதத்தை நிறைவேற்றினார். அதே நேரம் தன் மூத்த மகனை இழந்த காந்தாரி, போர்க்களத்தில் இருந்தவர்களை ஆவேசமாக அடித்து விரட்டினார். புத்திர சோகத்தில் அழுது புலம்பினார்.தெருக்கூத்து கலைஞர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியை காண, செல்லாத்துார், வேலன்கண்டிகை, ஸ்ரீகிருஷ்ணாபுரம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கூடியிருந்தனர். மாலை 6:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் மூட்டப்பட்ட அக்னி குண்டத்தில், திரளான பக்தர்கள் தீமிதித்து, தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.அதை தொடர்ந்து பிரம்மாண்ட வாண வேடிக்கையும், இசைக்கச்சேரியும் நடந்தது. இன்று காலை, தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: காரை அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.செஞ்சி அடுத்த காரை கிராமத்தில் புதிதாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ரிஷபேஷ்வரர் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில் சன்னதி கலசத்திற்கு ... மேலும்
 
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar