“சொற்ப வருவாயில் நிம்மதியாக, திருப்தியாக வாழுகின்ற மனிதனை நான் வாழ்த்துகின்றேன். அல்லாஹ் கொடுத்த சொற்ப வருவாயை ஒருவன் திருப்தியோடு ஏற்பானாயின், அவன் செய்த சொற்ப செயல்பாடுகளையும் அல்லாஹ் திருப்தியோடு ஏற்றுக்கொள்கிறான். அல்லாஹ் ஒரு மனிதன் மீது விருப்பம் கொண்டால், அவனை பலவகையிலும் சோதனை செய்வான். அவன் அதனைச் சகித்து திருப்தியோடு வாழ்ந்தால், அல்லாஹ் அவனை உண்மை முஸ்லிமாகத் தேர்ந்தெடுப்பான்,” என்கிறார். குறைந்த வருவாயில் திருப்தியுடன் வாழ்ந்தாலும், அல்லாஹ் கொடுத்ததைத் திருப்தியுடன் ஏற்றுக்கொண்டாலும், தீய காரியங்களைச் செய்யாமல் இருந்தாலும் கியாம நாளில் நரகம் அவரது கண்ணில் தென்படாது. நமக்கு இறைவனால் என்ன தரப்பட்டிருக்கிறதோ, அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். தகுதிக்குத் தகுந்தாற்போல் வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும்.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:42 மணி நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:15 மணி