பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
02:06
குளித்தலை: குளித்தலை அடுத்த, ஜி.உடையாபட்டி செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, குளித்தலை காவிரி நதியில் இருந்து, தீர்த்தக் குடம்
கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு யாகங்கள், அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு, கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. இதில், சங்ககவுண்டன்பட்டி,
பொறக்கிலாம்பட்டி, பேரூர், வடக்கு உடையாபட்டி, ராசாபட்டி, சின்னராசாபட்டி, தலையாரிபட்டி, மேலமேடு, குப்பமேட்டுபட்டி, பசுமேக்கிபட்டி, கருப்பேர்நாயக்கன்பட்டி, அலங்காரிபட்டி, ரெங்கநாதபுரம், குண்ணாகவுண்டன்பட்டி ஆகிய கிராம மக்கள்
பங்கேற்றனர்.
* மேட்டுமருதூர் செல்லாண்டியம்மன், மாரியம்மன், ஆராஅமுதீஸ்வர் கோவிலில், நேற்று, ஆறாம் ஆண்டு விழாவாக, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், சுற்றுவட்டார பகுதியைச்
சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.