Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி ... மயிலம் முருகர் கோவிலில் வைகாசி விசாக  திருவிழா மயிலம் முருகர் கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் வைகாசி விசாகம் லட்சக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் வைகாசி விசாகம் லட்சக்கணக்கில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

08 ஜூன்
2017
12:06

தூத்துக்குடி, திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடினர். திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 29ல் துவங்கியது. பத்து நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் சுவாமி, அம்பாளுக்குஅபிசேக, ஆராதனைகள் நடந்தன.

வைகாசி விசாக திருநாளான நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகமும் 2.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. காலை 10 மணிக்கு உச்சிக்கால பூஜையும் சண்முகருக்கு சிறப்பு அபிசேகமும் நடந்தது. பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால தீபாராதனையும் நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கசப்பரத்தில் எழுந்தருளி, வசந்தமண்டபத்தை அடைந்தார். அங்கு அபிசேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் சுவாமி, வசந்தமண்டபத்திற்கு சென்றார். அங்கு முனிக்குமாரனுக்கு சாபவிமோசனமளித்து பின்னர் கோயிலை அடைந்தார். வைகாசி விசாக திருவிழா, எளிய பக்தர்களின் விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்றைய நிகழ்வில் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்திருந்தனர். பாதயாத்திரை, காவடி உள்ளிட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினர். அதிகாலையில் இருந்தே திருச்செந்தூர் கடலில் புனிதநீராடி சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் சிவகாமி அம்மன் கோவிலில் இன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது.உலகப் புகழ் பெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar