திருக்கனூர் கைக்கிளப்பட்டு சஞ்சீவராயர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூன் 2017 01:06
திருக்கனூர்: கைக்கிளப்பட்டு சஞ்சீவிராய ஆஞ்ஜநேயர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. திருக்கனூர் அடுத்த கைக்கிளப்பட்டு சீதாராம லட்சுமண சஞ்சீவிராய ஆஞ்ஜநேய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 12ம் தேதி துவங்கியது. 13ம் தேதி காலை 8:00 மணிக்கு பிம்ப மண்டல பூஜை, பிற்பகல் 2:30 மணிக்கு மகா கலச திருமஞ்சனம் நடந்தது. நேற்று காலை 10:00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்து, கோவில் விமானத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.