புதுார், மதுரை கடச்சனேந்தல் அந்தனேரி காளியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழா நடந்தது. 3 நாட்கள் நடந்த இவ்விழாவில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் புறப்பட்டார். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.