பதிவு செய்த நாள்
19
ஜூன்
2017
05:06
பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில், 20நாட்களில் ரூ. ஒருகோடியே 55 லட்சத்து 04ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம் -1035 கிராமும், வெள்ளி-2,380 கிராமும், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளின் கரன்சிகள்-1999, ரொக்கமாக ரூ. ஒரு கோடியே 55லட்சத்து 04ஆயிரத்து 869 கிடைத்துள்ளது. பக்தர்கள் தங்கம், வெள்ளியில் செய்த வேல், ஆள்உருவம், பாதம் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் செல்வராஜ், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.