பதிவு செய்த நாள்
20
ஜூன்
2017
11:06
காஞ்சிபுரம்: ஐயங்கார்குளம் கிராமத்தினர், வெளியூர் பயணம் முதல் அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் அங்குள்ள சஞ்சீவராயரை வழிபட்ட பின் தான், எந்த காரியமும் செய்வதை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர். காஞ்சிபுரம் அடுத்துள்ளது ஐயங்கார்குளம் கிராமத்தில் பிரசித்து பெற்று விளங்கும், பழமையான சஞ்சீவராயர் கோவில், விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்டது. அதன் எதிரில், 133 ஏக்கர் பரப்பில் தாத சமுத்திரம் குளம் அமைந்துள்ளது. இங்கு முதலியார், மீனவர், முஸ்லிம், தலித் என, பல்வேறு சமூகத்தினர் வசிக்கின்றனர்.
நடவாவி உற்சவம்: இப்பகுதி மக்களுக்கு நெசவுதான் பிரதான தொழில். அந்த காலத்து வயதானவர்கள் இன்னும் அந்த தொழிலை விட்டு விலக முடியாமல் விரும்பி செய்து வருகின்றனர். அங்குள்ள கோவில் குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும் போது, கோவிலை பார்த்தால் கடலின் நடுவில் அமைந்து இருப்பது போல் காட்சியளிக்கும். இந்த கிராமத்து மக்கள் பல நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்த ஊர் சஞ்சீவராயர் கோவிலை முன்னிறுத்தி எந்த காரியமும் செய்து வருகின்றனர். அந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை சித்ரா பவுர்ணமி அன்று நடவாவி உற்சவத்தின் போது காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் அங்கு செல்வார். அந்த காலத்தில் அங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து, ஆறு நெசவு கூடம் இருக்கும் வகையில், தனித்தனி அறைகள் கட்டினர். அந்த வீடுகள் இன்னும் பழமை மாறாமல் இருக்கின்றன. தற்போது அந்த வீடுகளில் உள்ள நெசவு கூடங்கள் மட்டும் இரண்டு, ஒன்றாக குறைந்து விட்டது. இந்த காலத்து இளைஞர்கள் பலர் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வதை பெருமையாக நினைக்கின்றனர். பழக்கம் ஒன்றுமையுடன் விளங்கும் அந்த கிராமத்தில், ஒவ்வொரு வீட்டு விசேஷங்களுக்கும், வெளியூர் செல்வதென்றாலும் அங்குள்ள சஞ்சீவராயர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், எந்த காரியத்தையும் செய்து வரும் பழக்கத்தை காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்றனர்.
ஜீ.பெருமாள் ஐயங்கார் குளம்: எங்கள்ஊரில், வீட்டுக்கு வீடு நான்கு, ஐந்து நெசவுத்தறிகள் இருக்கும். எங்க தாத்தா, அப்பா, நான், என் மகன் செய்த தொழில் என் பேரன் செய்ய மாட்டான். தொழிலும் நலிந்து விட்டது. வருமானமும் குறைந்து விட்டது; இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீட்டு விசே ஷத்திற்கும் குல தெய்வமாக இருந்து வழிநடத்தி செல்லும் சஞ்சீவராயரை வழிபட்டு எந்த காரியமும் செய்வோம்.