பதிவு செய்த நாள்
26
ஜூன்
2017
10:06
சபரிமலை: சபரிமலையில் புதிய தங்கக் கொடிமரம் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. கொட்டும் மழையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சபரிமலையில் பழுதான கொடிமரத்தை மாற்றி, புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பத்தணந்திட்டை மாவட்டம் ரான்னி காட்டில் தேக்கு மரம் தேர்வு செய்யப்பட்டது.
பம்பையில் அது செதுக்கப்பட்ட பின் மூலிகை எண்ணெயில் ஆறு மாதம் ஊறவைக்கப்பட்டது; கடந்த மாதம், சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தங்கக் கொடிமரம் அமைக்க ஆந்திர பக்தர் ஒருவர் 9.200 கிலோ தங்கம் காணிக்கை வழங்கினார். கொடிமர பிரதிஷ்டை சடங்குகள் கடந்த நான்கு நாட்களாக சன்னிதானத்தில் நடந்தன.நேற்று காலை 11:௦௦ மணிக்கு கொடிமர பீடத்தில், தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரதிஷ்டை சடங்கு நடத்தினார். கொடிமர உச்சியில் குதிரை வாகனத்தை வைத்த பின் கலசாபிஷேகம் நடந்தது. தந்திரியின் மகன் பிரம்ம தத்தன் தந்திரி, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் சடங்குகளுக்கு உதவியாக இருந்தனர். பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், தலைவர் கோபாலகிருஷ்ணன், உறுப்பினர்கள் அஜய், ராகவன் பங்கேற்றனர்.