தேவிபட்டினம் செல்வ முத்துமாரியம்மன் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2017 01:06
தேவிபட்டினம்: தேவிபட்டினம் ஆசாரிதெரு செல்வ முத்துமாரியம்மன் கோயில் கும்பாவிஷேக விழாவை முன்னிட்டு நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு விழா குழுவினர் வழிபாடு செய்து முகூர்தகால் நடப்பட்டது. அதைத் தொடர்ந்து யாகசாலை அமைப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்றன. ஜூலை 5ல் முக்கிய விழாவான கும்பாபிஷேக விழா நடைபெறஉள்ளது. விழா ஏற்பாடுகளை தேவிபட்டினம் ஆசாரிதெரு விழா குழுவினர் செய்து வருகின்றனர்.