Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ... சமுக்தியாம்பிகை கோவிலில் புனர்பூச பேராபிஷேக விழா சமுக்தியாம்பிகை கோவிலில் புனர்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம்: இருமுடி கட்டுடன் வந்தது யானை
எழுத்தின் அளவு:
சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம்: இருமுடி கட்டுடன் வந்தது யானை

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2017
11:06

சபரிமலை: சபரிமலையில் ஆராட்டு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் ஐயப்பன் விக்ரகத்தை சுமக்கும் யானை இருமுடி கட்டுடன் நேற்று சன்னிதானம் வந்தது.

சபரிமலையில் 10 நாள் திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். இந்த ஆண்டு புதிய கொடிமரத்துக்கான பணிகள் நடைபெற்று வந்ததால் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறவில்லை. கடந்த 25-ம் தேதி புதிய தங்க கொடிமர பிரதிஷ்டை நடைபெற்றது. இதை தொடர்ந்து திருவிழா இன்று காலை தொடங்கியது. காலை ஏழு மணிக்கு கொடிமர பிரதிஷ்டையின் நான்காம் கலச பூஜையும், தொடர்ந்து 8.40 மணிக்கு கொடிப்பட்டத்துக்கு பூஜை நடைபெற்றது. 9.15 மணிக்கு தங்க கொடிமரத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியேற்றினார். இன்று முதல் ஜூலை ஆறாம் தேதி ஒன்தாம் திருவிழா வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஸ்ரீபூதபலி நடைபெறும். நாளை இரண்ாம் திருவிழா முதல் ஒன்தாம் திருவிழா வரை பகல் 12.30 மணிக்கு உற்சசவபலி நடைபெறும். ஜூலை இரண்டாம் தேதி ஐந்தாம் திருவிழா முதல் ஒன்பதாம் நாள் விழா வரை ஸ்ரீபூதபலியுடன், யானை மீது சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூலை ஆறாம் தேதி நள்ளிரவில் சசரங்குத்தியில் பள்ளிவேட்டை நடைபெறும். ஏழாம் தேதி மதியம் பம்பையில் ஆராட்டு நடைபெறும். ஆராட்டு பவனி அன்று இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறும். திருவிழா நாட்களில் ஐயப்பனின் விக்ரகத்தை சுமக்க திருவல்லா ஸ்ரீவல்லபசுவாமி கோயிலில் இருந்து ஜெயராஜன் என்ற யானை இருமுடி கட்டுடன் நேற்று சன்னிதானம் வந்தது. கொடிமரம் அருகே வந்த யானை ஐயப்பனை தும்பிக்கை உயர்த்தி வணங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
பிதுர்களுக்குத் திதி கொடுப்பதை ஏதோ செய்யக்கூடாத செயலாகப் பலரும் கருதுகிறார்கள். திதியன்றும், அமாவாசை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar