மானாமதுரை. மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திருஇருதய திருத்தல ஆலயத்திற்கு மாதந் தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் திருப்பலிக்கு ஏராளமானோர் வந்து செல்வர். ஆண்டு தோறும் நடைபெறும் பாஸ்கு திருவிழாவில் இயேசுவின் பிறப்பை நாடகமாக நடத்திக் காட்டுவதை காண வெளிநாடுகளிலும் இருந்தும் கூட ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து இறைவனை பிரார்த்தனை செய்வர். இந்நிலையில் ஆலயத்தின் 123 ம் ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருஇருதய பெருவிழா வரும் 7ம் தேதியும்,நற்கருணை பெருவிழா 8ம் தேதியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை திருத்தல அருள்பணியாளர் ரெமிஜியஸ்,மற்றும் இடைக்காட்டூர் சமூக முன்னேற்ற சங்கம், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.