பதிவு செய்த நாள்
30
ஜூன்
2017
12:06
திருப்பூர்: கோவிலுக்கு வாடகை செலுத்தாதவர்களின் பட்டியலை, கொண்டத்து காளியம்மனுக்கு கடனாளிகள் என பேனர் வைத்து, அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்; நிலுவைவைத் துள்ள பூசாரிகளையும், பணி நீக்கம்
செய்துள்ளனர். காலியிடம் திருப்பூர் அருகே பெருமாநல்லுாரில், பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, கோவை – சேலம் நெடுஞ்சாலையில், காலி இடம் உள்ளது. இதை, 40 ஆண்டுகளுக்கு முன், அடிமனை வாடகைக்கு எடுத்த, 22 பேர், கோவிலுக்கு முறையாக வாடகை செலுத்தவில்லை; வீடுகளாகவும், கடை களாகவும் கட்டி,உள் வாடகைக்கு விட்டு, மாதம் பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆயினும், அறநிலையத்துறை நிர்ணயித்த, குறைந்த அடிமனை வாடகையை கூட கட்டாமல், இழுத்தடித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவர்கள், கோவிலுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகைமற்றும் கவரியுடன், கொண்டத்து காளியம்மனுக்கு கடனாளிகள் என, அறநிலையத்துறை அதிகாரிகள், பட்டியல் தயாரித்து, கோவில் வளாகத்தில், பிளக்ஸ் பேனர் வைத்து உள்ளனர். கோவிலுக்கு மனையிடவரி செலுத்தாத பூசாரிகளை, பணி நீக்கம் செய்து, அவர்களின் பெயர் பட்டியலும், பிளக்ஸ் பேனராக வைக்கப்பட்டுள்ளது. பிளக்ஸ் பேனர் கோவில் அதிகாரிகள் கூறியதாவது: கோவில் நிலத்தை அடிமனை வாடகைக்கு எடுத்த, 22 பேர், 1 கோடியே , 10லட்சத்து, 95 ஆயிரத்து, 821 ரூபாய் நிலுவைவைத் துள்ளனர். அந்த நிலத்தில் கடைகள், வீடுகள் கட்டி, 84 பே ருக்கு, உள்வாடகைக்கு விட்டு, பல லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். நிலுவை தொ கையை கட்ட பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. எனவே , சம்பந்தப்பட்ட நபர்களின் பெயருடன், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது . கோவில் பூசாரிகள் ஐந்து பேர் , 38 லட்சத்து, 38 ஆயிரத்து, 436 ரூபாய் நிலுவை வைத் துள்ளனர். அவர்கள் பட்டியலும், பணி நீக்க அறிவிப்பும் வைத்துள்ளோம். அவர்களில் இருவர், நிலுவையை செலுத்துவதாக உறுதியளித்துள்ளனர். ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி, விரைவில் கோவில் நிலம் மீட்கப்படும். இவ்வாறு அவர்கள்கூறினர்.