வத்திராயிருப்பு கோயில் பிரம்மோற்ஸவ விழாவிற்கு நாள்கால் ஊன்றும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2017 12:06
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு சேதுநாராயணப் பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழாவிற்கு நாள்கால் ஊன்றும் விழா நடந்தது. இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்ஸவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு விழா ஜூலை 6 ல் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ளது. இதற்கான நாள்கால் ஊன்றும் விழா கோயிலில் நடந்தது. காலையில் சுவாமிக்கும், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கும் அபிஷேக தீபாராதனைகளுடன் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் கோயில் மண்டபத்தில் பந்தல்கால் வைக்கப்பட்டு நவதானியம் வைத்து முடிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின் அவை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. கோயில்முன் மந்திரங்கள் முழங்க குழிதோண்டப்பட்டு நவதானியம், போடப்பட்டு பால், இளநீர், பஞ்சகவ்யம் ஊற்றப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின் கோயில் சேவாசமிதி டிரஸ்ட் செயலாளர் நாராயணன், அவரது மனைவி மைதிலி தம்பதியராக சேர்ந்து பந்தல்கால்களை ஊன்றினர். தொடர்ந்து டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன், நிர்வாகிகள் கிருஷ்ணன், கண்ணன் அதற்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்தனர்.