பதிவு செய்த நாள்
30
ஜூன்
2017
12:06
குளித்தலை: குளித்தலை அருகே, சிதலமடைந்த சிவன் கோவிலை சீர் செய்து புனரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டு மருதூர் கிராமத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ், குளித்தலை நீலமேக பெருமாள் கோவில் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் ஆரா அமூதீஸ்வரர், செல்லாண்டியம்மன், மாரியம்மன், வினாயகர், முருகன் கோவில்கள் உள்ளன. கோவிலுக்கு சொந்தமாக, 25 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் மற்றும் தென்னை தோப்பு உள்ளது. செல்லாண்டியம்மன் கோவிலுக்கு எதிரில் உள்ள, ஆரா அமூதீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது என, கோவில் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதாக தொல்பொருள் வல்லுனர்கள் தெரிவித்தனர். கோவில், 75 அடி உயரத்தில் உள்ளது. கோவில் உள்ளே மிகப்பெரிய நந்தி உள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கரூர் கலெக்டராக பணியில் இருந்த வெங்கடேஷ், பொது மக்கள் கோரிக்கையை ஏற்று சிதலமடைந்த சிவன் கோவிலை, புனரமைப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். அதன் பின்னர் வந்த கலெக்டர்கள், சிதலமடைந்த கோவிலை பற்றி கண்டு கொள்ளவில்லை. எனவே, சிவன் கோவிலை புனரமைப்பு செய்ய வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.