மேலுார், மழை வேண்டி மேலுார் புலிப்பட்டியில் இரவில் சாமி ஆட்டம் மற்றும் கறி விருந்து நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். புலிப்பட்டி மலையடிவாரத்தில் உள்ள முனuniயாண்டி கோயிலில் நேற்று முன்தினம் இரவு கிராம மக்கள் ஒன்று கூடி மழை வேண்டி சாமி கும்பிட்டனர். அப்போது சாமியாடிகள் மழை வரம் தருவதாக வாக்குகொடுத்தனர். இதைதொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 101 சேவல் மற்றும் 25 ஆடுகளை கூட்டாக சமைத்து இரவு ஒரு மணிக்கு அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது.கறி உணவை வீட்டுக்கு எடுத்து செல்லக்கூடாது என்பதால், மீதமுள்ள சாப்பாட்டை குழி தோண்டி புதைத்தனர். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சாமியாடி துணையோடு வரிசையாக ஊருக்குள் உள்ள கள்ளிச்சி குப்பி கோயிலுக்கு வந்து விபூதி வாங்கிய பிறகு வீட்டிற்கு பேசாமல் செல்ல வேண்டும். மக்கள் கூறியதாவது: மழை வேண்டியும், கால்நடைகள் பெருகவும் 21 காவல் தெய்வங்களை வழிபட்டு 9 சாமியாடிகள் தலைமையில் திருவிழா நடந்தது. திருவிழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. மழை பெய்து அறுவடை செய்ததும் பக்தர்கள் ஒரு மரக்கால் நெல் மற்றும் சேவல், ஆடு போன்ற கால்நடைகளை கோயிலுக்கு கொண்டு வந்து காணிக்கையாக செலுத்துவதால் மழை பொழிந்து எல்லா வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை, என்றனர்.