பவானி: பவானி, சேவிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. பவானி, கல்பாவி கிராமம், தொட்டிபாளையம், சேவிபாளையம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜூன், 30ல் தொடங்கியது. கடந்த, 2ல் கணபதி ஹோமம் நடந்தது. நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.