மரக்காணம்: மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது. கந்தாடு கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, கடந்த 2ம் தேதி காலையில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, பூங்கரக வீதியுலா நடந்தது. மாலையில், கோவில் வளாகம் எதிரில் தீ மிதி உற்சவம் நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.