பதிவு செய்த நாள்
08
ஜூலை
2017
12:07
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், வல்வில் ஓரி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, ஆக., 2, 3 ஆகிய தேதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடு குறித்து, அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், நாமக்கல், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் ஆசியா மரியம் பேசியதாவது: கடையேழு வள்ளல்களில், ஒருவரான வல்வில் ஓரியை போற்றிடும் வகையில், ஆண்டுதோறும், ஆடி, 17, 18 ஆகிய இரண்டு நாட்கள், தமிழக அரசு சார்பில், வல்வில் ஓரி விழா, கொல்லிமலையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா, ஆக., 2, 3 ஆகிய நாட்களில், கொண்டாடப்பட உள்ளது. அரசு சார்பில், இவ்விழா, சுற்றுலா விழா, மற்றும் மலர் கண்காட்சி திறப்பு விழாவில், அரசுத்துறை அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை மேற்கொண்டு, சிறப்பாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.