தெற்காசியாவிலும் இந்தியாவிலும் பரவலாகக் காணப்படும் நாகணவாய்ப்புள், இலக்கியங்களில் சிறுபூவாய் எனப்படுகிறது. மக்கள் பேச்சு வழக்கில் மைனா என்பார்கள். பெரும்பான்மையாக கருமையாகவும் பழுப்பு கலந்த மஞ்சள் வண்ணத்திலும், காணப்படும் இப்பறவை. டிட்டிtச்tடிதிஞு ண்டுடிடூடூண் உடையது. அதாவது, கேட்பவற்றை அப்படியே திரும்ப உரைக்க வல்லது. கிளிகளைப் போலச் சொல்வதனைத் திரும்பச் சொல்லும் இப்பறவை, பேசும் பறவை ஆகும். தான் அடைய வேண்டிய இடத்தை நேராகச் சென்று அடையும் வலிமையே இதன் இயல்பு! ஆகவேதான், பராங்குசநாயகி தன் பேச்சை எடுத்துரைக்க நேராகச் செல்லும் மைனாவான நாகணவாய்ப் பறவையைத் தேர்ந்தெடுத்தாள் போலும்!