Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தட்சிணாயன புண்ய காலம் துவக்கம்: ... ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுட்டு வழிபாடு ஆடி மாத பிறப்பு: தேங்காய் சுட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் திருப்பூர் அருகே கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
11:07

திருப்பூர்: திருப்பூர் அருகே, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் மற்றும் கல் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டம், ஜெ.கிருஷ்ணாபுரத்தில், 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்துள்ளது. பெரும்பாலும் வீரர்களுக்கு நடுகல் உள்ள நிலையில், அதிசயமாக இப்பகுதியில், பெண்களுக்கு நடுகல் வைக்கப்பட்டுள்ளது.மூன்றே கால் அடி அகலம், 4 அடி உயரம் கொண்ட இந்த நடுகல், ஆயர் குல பெண் ஒருவரின் நடுகல் என தெரியவந்துள்ளது. பெண் சிலைக்கு இரு புறமும் மாடுகளுடன் காணப்படும் பெண் உருவமும், வலது கையில் கம்பு போன்ற சிறிய ஆயுதம், காது, கழுத்து பகுதியில் அணிகலன், கையில் காப்பு, உடை என அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது.

விண்ணுலகம் : இப்பகுதியில் இறந்த இருவர், ஓடம் போன்ற ஒன்றில் விண்ணுலகம் செல்வது போலவும், குதிரைகள் நீர் அருந்துவதற்கு பயன்பட்ட கல் தொட்டி ஒன்றும் காணப்படுகிறது. இது குறித்து, வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர், ரவிக்குமார் கூறியதாவது:சேரர்களின் மேற்கு கடற்கரையையும், பல்லவர், சோழர், பாண்டியர்களின் கிழக்கு கடற்கரையையும் இணைக்கும் வகையில், வணிக பெருவழி அமைத்துள்ளனர். அவ்வாறு அமைந்த திண்டுக்கல்- --- பாலக்காடு வழியில், பல்லடம் அருகே ஜெ.கிருஷ்ணாபுரம் அமைந்துள்ளது. சமூகத்துக்கு, சிறந்த சேவை, கால்நடைகளை விலங்குகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் வீரச்செயல் புரிந்து, உயிர் நீத்தவர்களுக்கு, நடுகல் அமைக்கும் வழக்கம், 2,500 ஆண்டுகளாக இருந்துள்ளது. அவ்வகையில், கி.பி., 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால, வீர மங்கை நடுகல், ஜெ.,கிருஷ்ணாபுரத்தில் கிடைத்துள்ளது.

மாடு : கால்நடை மேய்ப்பு தொழில் செய்த பெண்ணுக்கு நடுகல் வைக்கப்பட்டு, சிலையில் இரு புறமும், மாடு உள்ளது. சிகை அலங்காரம், காது, மார்பில் அணிகலன், கையில் காப்பு, ஆடை அமைப்பு என அற்புதமாக செதுக்கப்பட்டு உள்ளது. வீர மகளிர் நடுகல், மாடுகளுடன் கிடைத்துள்ளது சிறப்பானதாகும். இதற்கு அருகிலேயே, இறந்த இருவர், வாகனத்தில் விண்ணுலகம் செல்வது போல், ஒரு நடுகல் காணப்படுகிறது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த, திப்பு சுல்தானின், குதிரை லாயம் இக்கிராமத்தில் இருந்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இங்கிருந்த குதிரைகள் நீர் அருந்துவதற்காக, கல்லால் உருவாக்கப்பட்ட தொட்டி ஒன்றும் உள்ளது. இவ்வாறு ரவிக்குமார் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar