Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ... திருப்போரூர் கந்தசுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆக.,3ல் ஆடிப்பெருக்கு விழா: காவிரியில் தண்ணீர் வருமா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2017
01:07

தஞ்சாவூர்: ஆகஸ்ட், 3ல், ஆடிப்பெருக்கு விழா நடைபெறும் நிலையில், காவிரியில் தண்ணீர் வருமா என, விவசாயிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காவிரிக் கரையோர மக்களால் ஆடி அமாவாசையும், ஆடிப்பெருக்கும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அன்று குடும்பத்தோடு, காவிரியில் புனித நீராடுவர். காவிரி, தமிழகத்தில் காலடி பதிக்கும் ஒகேனக்கல் முதல், வங்க கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை, இந்த நீராடல் நடைபெறும்.குறிப்பாக, தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு புஷ்ப மண்டபம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் ஆகிய இடங்களில், அன்றைக்கு மட்டும் ஏராளமானோர், புதிதாக திருமணமான தம்பதியரும் புனித நீராடுவர். ஆடி, 18ல், காவிரியில் நீராடி, காவிரி அன்னையை வழிபட்டு மஞ்சள், குங்குமம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புதுமண தம்பதியர், மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆகஸ்ட், 3ல், ஆடிப்பெருக்கு விழா வருகிறது. அன்று காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

அதே நேரம், தற்போது, காவிரி ஆறு வறண்டு பாலைவனமாக காட்சி தருகிறது. அத்துடன் கரூர், திருச்சி மாவட்டங்களில் காவிரி ஆறு முழுவதும் படுபாதாளமாக காணப்படுகிறது. ஒவ்வொரு இடத்திலும் 20 அடி, 30 அடி ஆழத்தில், மணல் அள்ளப்பட்டு உள்ளது. இந்த பள்ளங்கள் நிரம்பவே, பெருமளவு தண்ணீர் தேவைப்படும். தற்போதுள்ள சூழ்நிலையில், வினாடிக்கு, 3,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால், ஏறத்தாழ, 2 டி.எம்.சி.,க்கு சற்று அதிகமான தண்ணீர் காலியாகிவிடும். ஆனால் இன்றைய நிலையில், மேட்டூர் அணையில், 5.75 டி.எம்.சி., மட்டுமே உள்ளது. ஆகவே, பருவமழை கை கொடுத்தால் மட்டுமே, ஆடிப்பெருக்குக்கு மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar