அன்னுார் : அன்னுார் கருப்பராயன் சுவாமி தேர்த்திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. அன்னுார், சிறுமுகை ரோடு, கைகாட்டியில் பிரசித்தி பெற்ற கருப்பராயசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருள்வாக்கு கேட்க ஏராளமானபக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் மூன்றாம் ஆண்டாக இந்த ஆண்டு தேர்த்திருவிழாநடக்கிறது. வரும் 24ம் தேதி வாஸ்து சாந்தி, விநாயகர் வழிபாடுடன்விழா துவங்குகிறது. இரவு கரகம் எடுத்தல், தீபாராதனை நடக்கின்றன. 25ம் தேதி மாலையில், 21 வகை மூலிகைகளால், அபிேஷகம் செய்யப்படுகிறது. மாலை 6:00 மணிக்குதேரோட்டம் துவங்குகிறது. இரவு 10:00 மணிக்கு நிலையை அடைகிறது. 26ம் தேதி காலையில், கருப்பராயருக்கு பால் அபிேஷகம் செய்தல், பொங்கல் வைத்தல், முடி எடுத்தல் கும்மியாட்டம் நடக்கின்றன. மதியம் 108 கிடாய்கள் வெட்டி,பக்தர்களுக்கு பிரியாணி போடப்படுகிறது. இரவு கலை நிகழ்ச்சிநடக்கிறது.