மானாமதுரை, மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் கும்பாபிேஷகம் நடைபெற வேண்டியும், மழை பெய்ய வேண்டியும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. அம்மனுக்கும்,சுவாமிக்கும் சிறப்பு அபிேஷகங்களும், ஆராதனைகளும் நடந்தது.நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு சாமி பாடல்களை பாடினர். நிகழ்ச்சியில் ஆனந்தவல்லி அம்மன் கோயில் திருப்பணிக்குழு டிரஸ்ட்டியினர் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.