Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ... சதுரகிரி ஆடி அமாவாசை விழா: மலைப்பாதையில் நெரிசலில் தவித்த பக்தர்கள் சதுரகிரி ஆடி அமாவாசை விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2017
10:07

ராமேஸ்வரம்: ஆடி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் திதி பூஜை செய்து, புனித நீராடினார்கள். நேற்று ஆடி அமாவாசை யொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்ராமநாதசுவாமி கோயிலுக்கு தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பின் கோயில் அக்னி தீர்த்த கடலில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்தனர். ராமநாதசுவாமி கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ஸ்ரீராமர், சீதா, லெட்சுமணருடன் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் ராமருக்கு மகா தீபாரதனை நடத்தி, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுத்தார்.இதையடுத்து பக்தர்கள் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி சிவ சிவ என கோஷமிட்டபடி அக்னி கடலில் மூழ்கி புனித நீராடினர். பின் கோயிலினுள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடவும், சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பரிதவித்த பக்தர்கள் : அமாவாசையோட்டி 6 ஆயிரம் வாகனங்கள், ரயில், அரசு பஸ்கள் மூலமாக 2 லட்சத்துக்கு மேலான தமிழக பக்தர்கள் குவிந்தனர். அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் நான்கு ரதவீதி, பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. போதுமான கார் பார்க்கிங் வசதியில்லாமல் மதுரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி தேசிய சாலை இருபுறமும் 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் நிறுத்தினர். பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் அன்னதானம் செய்தனர். ஆனால் இந்தாண்டு அதிகளவு பக்தர்கள் கூட்டம் இருந்ததால் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்தனர். இக்கூட்ட நெரிசலை பயன்படுத்தி, சில லாட்ஜூகளில் அறைகளின் வாடகையை 2 மடங்கு அதிகமாக ரூபாய் 3 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்  தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் தெற்கு ரத வீதியில் ரூ. 14 லட்சம் செலவில் நிழல் தரும் பந்தல் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் (அப்பருக்கு) மடம் ... மேலும்
 
temple news
இந்த வருடம் அக்னி நட்சத்திரம் நாளை மே 4ம்தேதி தொடங்கி மே 28ம்தேதி முடிகிறது.முன்னொரு காலத்தில் சுவேதகி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar