திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம்காணிக்குடியிருப்பில் சொரிமுத்தையனார் (சாஸ்தா) கோயில் உள்ளது. இதுவே சாஸ்தாவின் முதல் கோயில். பூர்ணா, புஷ்கலாதேவியுடன் சாஸ்தா இருக்கிறார். கோயில் முன்புள்ள தாமிரபரணியில் நீராடி தர்ப்பணம் செய்வர். ஆடி அமாவாசை இங்கு சிறப்பாக நடக்கும். பொதிகை மலையிலுள்ள அகத்தியர் தீர்த்தம், பாபநாசம் பாபநாசர் கோயில் முன்புள்ள சுவாமி, அம்மன் படித்துறைகளில்நீராடுவதும் புனிதமானது. திருநெல்வேலியில் இருந்து பாபநாசம் 45 கி.மீ., அங்கிருந்து மலைப்பாதையில் 10 கி.மீ., தூரத்தில் காணிக்குடியிருப்பு உள்ளது.