Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிருஷ்ணகிரியில் ஆடிப்பூரம் ... சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் சேர்த்தி சேவை சேலம் சவுந்திரராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 435வது திருவிழா துவங்கியது
எழுத்தின் அளவு:
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய 435வது திருவிழா துவங்கியது

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2017
12:07

தூத்துக்குடி : தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி கடற்கரையையொட்டி அமைந்துள்ள தூய பனிமய மாதா பேராலயத்தில் ஆண்டு தோறும் நடக்கும் திருவிழா தென்மாநிலங்கள் மற்றும் கீழ்திசை நாடுகளில் பிரசித்தி பெற்றதாகும். நேற்று காலை ஆலயத்தில் சிறப்பு திருப்பலியுடன் கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது. தொடர்ந்து மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி ஆலய வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் காலை 8.55 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் கொடியை ஏற்றி வைத்தார். உலக சமாதானத்தை வலியுறுத்தி புறாக்கள் பறக்கவிடப்பட்டன. அப்போது பழைய துறைமுகத்தில் இழுவை கப்பலிலிருந்து சங்கு ஒலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக கொண்டு வந்திருந்த பழம், பால் உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர். பகல் 12 மணிக்கு பனிமயமாதா அன்னைக்கு பொன் மகுடம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் தினமும் சிறப்பு திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் நடக்கிறது. வரும் 30 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை புது நன்மை விழா நற்கருணை பவனி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பனிமயமாதாவின் திரு உருவ பவனி ஆகஸ்ட் 5ம் தேதி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar