வைரவன்பட்டி கோயில் பிரமோற்ஸவம் திருக்கல்யாணத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2017 02:07
திருப்புத்துார், திருப்புத்துார் அருகே வைரவன்பட்டி வளரொளிநாதர் வயிரவசுவாமி கோயிலில் பிரமோற்ஸவத்தை முன்னிட்டு இன்று திருக்கல்யாணத்துடன் நிறைவடைகிறது. நகரத்தார் கோயிலான இங்கு ஆடி மாதம் வயிரவருக்கு 12 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். கடந்த ஜூலை 18 ல் கொடியேற்றப்பட்டு உற்சவம் துவங்கியது. தினசரி காலை வெள்ளி ரதத்தில் வயிரவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் தேரில் வயிரவர் எழுந்தருளி தேரோட்டம் நடந்தது. நேற்று காலை 9:45 மணிக்கு வயிரவர் வயிரவர் தீர்த்தக் கரையில் எழுந்தருளினார். படித்துறையில் எழந்தருளிய அட்சரத்தேவருக்கு சிறப்பு அபிசஷக, ஆராதனைகள் நடந்த பின்னர் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து வெள்ளி ரதத்தில் வைரவர் சர்வ அலங்காரத்தில் புறப்பாடு நடந்தது. இரவில் பூப்பல்லக்கில் வைரவர் திருவீதி உலா நடந்தது. இன்று காலை 9:15 மணிக்கு வயிரவருடன் பஞ்சமூர்த்திகளுக்கும் மகா அபிசேகம் நடைபெறும். மாலை 6:15 மணிக்கு திருக்கல்யாணமும், இரவு 8:௦௦ மணிக்கு பஞ்சமூர்த்திகள்,வயிரவர் திருவீதி உலாவும் நடைபெறும்.