பதிவு செய்த நாள்
04
ஆக
2017
12:08
சேலம்: ஆடி, 18 முன்னிட்டு, நேற்று அதிகாலை, 6:00 மணி முதல், சேலம், கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. அதையடுத்து, மஞ்சள் கொம்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. முன்னதாக, கோட்டை அழகிரிநாதர் கோவிலில் இருந்து, மஞ்சள், குங்குமம், பழ தட்டு, மாங்கல்யம், புடவை, வெற்றிலை பாக்கு ஆகியவை சீர்வரிசையாக வழங்கப்பட்டது. குமரகுரு தண்டாயுதபாணி கோவிலில், முருகனுக்கு வெள்ளி கவசம் சாத்துபடி செய்யப்பட்டு, தெய்வானையுடன் காட்சியளித்தார். செங்குந்தர் மாரியம்மன், தாமரையில் அமர்ந்தபடி, மகாலட்சுமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். எல்லைபிடாரியம்மன், குகை மாரியம்மன், காளியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், டவுன் கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. வழிபாட்டிற்காக வந்த பக்தர்களுக்கு, கேசரி, பொங்கல், மஞ்சள், குங்குமம், தாலி கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது.