இளையான்குடி மேலாயூரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த புரவி எடுப்பு விழாவில் கிராம மக்கள் மட்டுமின்றி சுற்று வட்டார மக்களும் கலந்து கொண்டனர். மேலாயூரில் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் புரவி எடுப்பு நடைபெற்று வந்தது. பருவ மழை தங்கு தடையின்றி பெய்து விவசாயம் செழிக்க கிராமத்தின் காவல் தெய்வமான அய்யனாருக்கு புரவி எடுப்பு திருவிழா எடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால், கடந்த 25 வருடங்களாக, மேலாயூரில் குதிரை எடுப்பு விழா, நடைபெறாமல் இருந்தது.
ஆனால், தற்போது, கிராம மக்களின் முயற்சியால், புரவி எடுப்பு விழா நடைபெற்றது. அதன்படி நடந்த விழாவில், முன்னதாக மண் குதிரைகளை செய்யும் சிற்பிகள் வீட்டில் கோயிலுக்கு தேவையான குதிரைகள் உட்பட சுவாமி சிற்பங்கள் செய்யப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க கிராமத்தில் இருந்து கிராம மக்கள் புறப்பட்டு குதிரை செய்யும் இடத்துக்கு சென்று அங்கு குதிரைக்கு கண்திறக்கும் வழிபாடு செய்தனர்.