Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சேலத்தில் இன்று மாரியம்மன் பண்டிகை: ... மாரியம்மனுக்கு அலகு குத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தலைவாசல் அருகே பாழடைந்துள்ள கோவில்கள்; பக்தர்கள் வேதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2017
01:08

தலைவாசல்: தலைவாசல் அருகே, பழமை வாய்ந்த கோவில்கள் பாழடைந்த நிலையில் இருப்பதால், பக்தர்கள் வேதனைப்படுகின்றனர். தலைவாசல் சுற்றுவட்டாரங்களில் பழமையான கோவில்கள் அதிகளவில் உள்ளன. ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயம், சித்தேரி சிதம்பரேஸ்வரர் ஆலயம், நாவக்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்டவை, 500 ஆண்டுகள் கடந்து, இன்றும் நிலைத்து நிற்கின்றன. தமிழகத்திலேயே அஷ்ட பைரவர்கள் உள்ள ஒரே கோவிலாக, ஆறகழூர் காமநாதீஸ்வரர் ஆலயம் திகழ்கிறது. இக்கோவிலில் உள்ள பழமையான கல்மண்டபம் பராமரிப்பின்றி உள்ளது. மண்டபத்தின் சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளதுடன், பழைய பொருட்கள் வைக்கும் குடோனாக மாறியுள்ளது. ஆறகழூர் சோழீஸ்வரர் ஆலயத்தின் முன்புறம் மாடு, ஆடுகள் கட்டி வைக்கும் தொழுவமாக மாறியுள்ளது. காமநாதீஸ்வரர் ஆலயத்தின் ஆதி கோவிலான, இக்கோவில் முக்கியத்துவம் குறைந்து பகுதிவாசிகளே வராத நிலையில் உள்ளது. சித்தேரியில் உள்ள சிதம்பரேஸ்வரர் ஆலயமும் மிகவும் சிதிலமடைந்து, மாட்டு தொழுவமாக காட்சியளிக்கிறது. கோவிலின் பின்புறம் உள்ள முருகன், வள்ளி, தெய்வானை சன்னதிகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவிலுக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், குடிமகன்களின் கூடாரமாகியுள்ளது. மது பாட்டில்கள் வளாகத்தின் உள்ளேயே உடைந்து கிடப்பதால், கோவிலின் உள்ளே வெறும் காலால் செல்ல முடியாத நிலை உள்ளது. நாவக்குறிச்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலும், பராமரிப்பின்றி உள்ளது. இந்த கோவிலில் சில வாரங்களுக்கு முன், பல கோடி மதிப்புள்ள, ஒன்பது ஐம்பொன் சிலைகள், சுரங்க அறையில் இருந்து எடுக்கப்பட்டது. கோவில் சொத்துகள் ஏராளமாக இருந்தும், சில தனிநபர்கள் ஆக்கிரமித்து அனுபவித்து வருகின்றனர். இதை, அறநிலையத்துறை அதிகாரிகள், கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar