Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேவனூர் முத்தாலம்மன், கற்பூர அம்மன், ... காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் கோபுரத்தில் செடிகள் காஞ்சிபுரம் வரதராஜர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அடையாளம் மாறிய சமணர் கோவில்
எழுத்தின் அளவு:
அடையாளம் மாறிய சமணர் கோவில்

பதிவு செய்த நாள்

11 ஆக
2017
12:08

சமணர்களின் அடையாளமாக தற்போதும் திகழும், திருப்பருத்திக்குன்றம் திரைலோக்கியநாதர் சமண சுவாமி கோவிலில் பழமையான அடையாளங்கள் மாற்றப்பட்டிருப்பதாக, காஞ்சி சமண தமிழ் இலக்கிய மன்ற செயலர், நீலகேசி கவலை தெரிவித்தார். தொன்மை வாய்ந்த காஞ்சிபுரம் நகரம், சிவ, விஷ்ணு, சமண வழிபாடுகளை கொண்டிருந்தது. இன்றும் வழிபாடுகள், அந்த கோவில்களில் விசேஷமாக நடைபெற்று வருகின்றன.

புனரமைப்பு: சிவ, விஷ்ணு கோவில்கள் காஞ்சிபுரத்தில் அதிகமுள்ள நிலையில், சமண மத கோவில்கள் கொஞ்ச மாகவே உள்ளன. ஜீன காஞ்சி என்றழைக்கப்படும், திருப்பருத்திக்குன்றம் கிராமத்தில், சமணர் தலமான திரைலோக்கியநாதர் ஜீன சுவாமி கோவில் உள்ளது. சமணர்களின் அடையாளமாக அமைந்துள்ள இக்கோவில், 700 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தமிழ்நாடு தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. சமணர்கள் பலர் தற்போதும், இக்கோவிலில் வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில், ஐந்தாண்டுகளுக்கு முன் இக்கோவிலில் நடைபெற்ற புனரமைப்பு பணியில், கோவிலின் வடிவமைப்பு மாறிவிட்டதாக, காஞ்சி சமண தமிழ் இலக்கிய மன்ற செயலர், ஓய்வுபெற்ற தமிழ் பேராசிரியை நீலகேசி புகார் தெரிவித்து உள்ளார்.

நீலகேசி கூறியதாவது: கோவில் மேற்கூரை பலவீனமாக உள்ளது. இத்தனை ஆண்டுகளில் கோவில் விமானத்திற்கு இடிதாங்கி கூட வைக்கப்படவில்லை. தொல்லியல் துறை இக்கோவிலை கண்டுகொள்ளவே இல்லை. மத்திய அரசின் நிதியில், ஐந்தாண்டுகளுக்கு முன் கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டது. அதில், பல குளறுபடிகள் நடந்து விட்டன. பழமையான நடைமுறைகள், அமைப்புகள் மாற்றப்பட்டு உள்ளன.

அருங்காட்சியகம்: மூலவரிடம் உள்ள சிங்க சின்னம் இடம் மாற்றப்பட்டுள்ளது. மேலும், கோவில் கட்டிய போது, கிணறு வெட்டிய, செங்கதிர் செல்வன் என்பவரின் கல்வெட்டுகள் சிமென்ட் பூசி அழிக்கப்பட்டு உள்ளன. மஹாராஷ்டிராவில் உள்ள, அஜந்தா, எல்லோரா போன்று பழமைவாய்ந்த ஓவியங்கள் மேற்கூரையில் இடம்பெற்றுள்ளன. புனரமைப்பிற்கு பின், மழைநீர் ஒழுகி, ஓவியங்கள் பாழாகி வருகின்றன. இக்கோவிலின் ஸ்தல விருட்சமான குராமரம், முறையான பராமரிப்பில் இல்லை. கோவிலின் வளாகத்தில் ஒரு இடத்தில், பூச்செடிகள் வைப்பதை விட, பல்வேறு இடங்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளை வைத்து, அருங்காட்சியகம் போல் மாற்றலாம். மேற்கண்ட பல பிரச்னைகள், இக்கோவில்களில் தற்போதும் உள்ளதாகவும், தொல்லியல் துறைக்கு பல முறை கடிதம் மூலம் புகார் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar