அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஆக 2017 02:08
செஞ்சி: செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் சிவநெறி சிவனடியார் திருக்கூட்டம் மற்றும் செஞ்சி திருமுறை கழகம் சார்பில் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு காலை 8 மணிக்கு அருணாசல ஈஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். காலை 9 மணிக்கு பன்னிரு திருமுறையில் இருந்து 8 திருமுறை முற்றோதல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு சிவ கைலாய வாத்தியத்தியங்களுடன் பன்னிருதிருமுறை ஊர்வலம் நடந்தது. இதில் திரளான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.