தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் பஜன், விளக்குப் பூஜை, ஆன்மிக சொற் பொழிவு நடந்தது. சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் தோரோட்டம் நடந்தது. முன்னதாக அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.