சபரிமலை : ஆவணி மாத பூஜைகளுக்காக நேற்று சபரிமலை கோயில் நடைதிறந்தது. நேற்று மாலை 5 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து புதிய தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறந்ததும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் நெய் அபிஷேகத்தை தந்திரி தொடங்கி வைப்பார். தொடர்ந்து கணபதி ஹோமம் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஆக.21ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
விநாயகர் திருவிழா : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பம்பையில் விநாயகர் திருவிழா இன்று தொடங்கி ஆக.26ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலையில் கணபதிஹோமமும், தொடர்ந்து பிரார்த்தனையும் நடைபெறும். ஆக.26-ம் தேதி பம்பை திரிவேணி சங்கமத்தில் விநாயகர் சிலை விசர்ஜனம் செய்யப்படும்.