சிறுதாவூர்;சிறுதாவூரின் வரலாற்று பொக்கிஷமான புத்தர் கோவில், காணாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், முக்கியத்துவம் வாய்ந்த பாசன ஏரி, விசாலமான தாமரை குளம், பழமை பொக்கிஷங்களாக சிவன் கோவில் மற்றும் புத்தர் கோவில் உள்ளது. புத்தர் கோவில் பராமரிப்பின்றி, சீரழிந்த நிலையில் உள்ளது. கோவிலில் இருந்த புத்தர் சிலையை காணவில்லை. எனவே, இங்குள்ள கற்துாண்களை ஒருங்கிணைத்து, சுற்றியுள்ள இடங்களையும் கைப்பற்றி, புதிதாக புத்தர் கோவில் கட்ட, தொல்லியல் துறை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிறுதாவூர் கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.