Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுதாவூர் புத்தர் கோவில் ... ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் திருப்பணியின் போது சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
கோவில் திருப்பணியின் போது சோழர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 ஆக
2017
12:08

சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் திருப்பணியின்போது, புலி சின்னத்துடன், சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அறம் வரலாற்று ஆய்வு மையத்தினர், கிருஷ்ணகிரி மாவட்டம், வானமங்கலத்தில், பழமையான ஆஞ்சநேயர் கோவில் புனரமைப்பு நடப்பதை அறிந்து, அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று, உடைந்த நிலையில் கிடைத்தது.

இது குறித்து, பேரவை தலைவர், அறம் கிருஷ்ணன் கூறியதாவது: பெருமாள் கோவிலுக்கு சொந்தமான கருட கம்பம் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை துாக்கி நிறுத்தும் போது, அதன் அடிப்பகுதியில், இரண்டு கற்கள் கிடந்துள்ளன. ஒன்றை, கம்பத்திற்கு கீழே வைத்து, மற்றொன்றை வெளியில் எடுத்து போட்டுள்ளனர். அது, சோழர் கால, வணிக குழுவினரின் கல்வெட்டு.இதன் மேல்பகுதியில், விஜயநகர் பேரரசின்சின்னமான, கண்ட பேரண்ட பறவை, சோழர்களின் சின்னமான புலி, வணிகக்குழுவினரின் சின்னமான, சித்திரமேழி ஆகியவை உள்ளன. இதுவரை, கிருஷ்ணகிரி மாவட்டம், பெண்ணேஸ்வர மடம் கல்வெட்டில் மட்டுமே, செங் கோலுடன் புலி சின்னம் கிடைத்துள்ளது. அது, வாணகோவரையரின்மகளும், மூன்றாம் ராஜராஜ சோழனின் பட்டத்தரசியுமான கூத்தாடும் தேவர், நாச்சியாரின் கல்வெட்டு வரிகளுக்கு முன் செதுக்கப்பட்டுள்ளது. சித்திரமேழி என்பதற்கு, அழகிய கலப்பை என, பொருள். இந்த சின்னம், விவசாயிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட குழுவிற்கு சொந்தமானது. கல்வெட்டில் ஏழு வரிகள் உள்ளன. அதில், ஹொய்சாளர்களின் கடைசிஅரசனான வீர வல்லாள தேவர் என்ற பெயர் உள்ளது. ஓசூரில் உள்ள வணிக குழுக்களுக்கும், தொண்டை மண்டல வணிக குழுக்களுக்கும் தொடர்பு இருந்து இருக்கலாம். மேலும், இது, ஹொய்சாள அரசனான, வீரவல்லாளன் காலத்தில் வெட்டப்பட்டு இருக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar