பதிவு செய்த நாள்
23
ஆக
2017
12:08
சேலம்: அன்ன அலங்காரத்தில், செங்குந்தர் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலம், அம்மாபேட்டையில் உள்ள செங்குந்தர் மாரியம்மன் கோவிலில், ஆடி, 1 முதல் திருவிழா கொண்டாடப்படுகிறது. நேற்று காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தயிர், நெய், இளநீர், குங்குமம் ஆகியவற்றின் மூலம் அபிஷேகம் மற்றும் அன்ன அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. மதியம், 1:00 மணிக்கு, 1,200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 3:00 மணி முதல், மீண்டும் சிறப்பு அபி?ஷக, ஆராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், சுவாமியை தரிசித்தனர்.