பதிவு செய்த நாள்
23
ஆக
2017
12:08
எலச்சிபாளையம்: கொன்னையார் கிராமத்தில், உலக அமைதி வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமத்தில், புதிதாக கட்டபட்டுள்ள மதுரைவீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் கோவிலில், உலக அமைதிக்காகவும், மழைவளம் வேண்டியும், தொழில் பெருகி செல்வம் செழிக்க வேண்டியும் நேற்று முன்தினம் திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி,, கணபதி ஹோமம், சுவாமிகளுக்கு அலங்கார பூஜை, திருவிளக்குபூஜை நடந்தது. இதில், கொன்னையார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்கினை கொண்டுவந்து, விளக்கேற்றி வைத்து பிரார்த்தனை செய்தனர்.