கரூர்: கரூர் அருகே, மண்மங்கலம், குப்புச்சி பாளையம் பாலமுருகன், சிவதுர்க்கை, ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழா, விநாயகர் பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று அதிகாலை, புன்யாகசனம் நடந்து, சர்வசாதகத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பின் நடந்த மஹா தீபாராதனைக்குப் பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.