பதிவு செய்த நாள்
28
ஆக
2017
01:08
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. நாமகிரிப்பேட்டை மாரியம்மன், செல்வகணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 20ல் துவங்கியது. கடந்த, 24ல் கிராம சாந்தி; 25ல், கஜபூஜை, கோ, அஸ்வ பூஜை, வேத பாராயணம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, பெருமாள் கோவிலில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 25 இரவு, இரண்டாம் கால பூஜை, நேற்று முன்தினம், மூன்றாம் கால யாக பூஜை பஞ்ச கவ்ய பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, ஐந்தாம் கால யாக பூஜை துவங்கியது. தொடர்ந்து புனித நீரை சிவாச்சாரியார்கள் கலசத்திற்கு ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். காலை, 7:30 மணிக்கு செல்வகணபதி, மாரியம்மன், கொடி மரத்திற்கு தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் மக்கள் செய்திருந்தனர்.