மயிலம்: மயிலம் முருகர் கோவிலில், சஷ்டி வழிபாடு நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு காலை 11:00 மணிக்கு, கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் அன்னதான நிகழ்ச்சி நடந்தது. இரவு 8:00 மணிக்கு உற்சவர், மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் நடந்த வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவலத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.