பதிவு செய்த நாள்
28
ஆக
2017
01:08
குளித்தலை: குளித்தலை அடுத்த வதியம் பஞ், கீழக்குறைப்பாளையம் கிராமத்தில், விநாயகர், கரும்பாயி, பெரியகாண்டியம்மன், தங்காள், வீரமலையாண்டி, பெரியண்ணசுவாமி, மகாமுனி, லாடசன்னாசி, காத்தவராயன், மதுரைவீரன் கன்னிமார் சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் பங்காளிகள், வதியம் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை புனித நீர் எடுத்து வந்தனர். மூன்று கால பூஜையுடன் சிவாச்சாரியார்கள் சிறப்பு ஹோமம் செய்தனர். நேற்று காலை கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. குளித்தலை சுற்றுவட்டார பகுதிகளான, மணத்தட்டை, வதியம், கே.பேட்டை, கள்ளப்பள்ளி, கருப்பத்தூர் உட்பட, பல்வேறு கிராமத்தில் இருந்து கோவில் பங்காளிகள், பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.