பதிவு செய்த நாள்
29
ஆக
2017
01:08
சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, சேலம் ராஜகணபதி, சதுர்வேத கணபதியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், தேரடி வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், கடந்த, 23ல் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. இதையடுத்து, தினசரி சிறப்பு அலங்கார, ஆராதனை நடந்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணிக்கு, அதிகாலை பூஜை நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 7:00 மணிக்கு சதுர்வேத கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள், குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.