Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

குருதட்சிணாமூர்த்தி கோயிலில் ... சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2017
01:09

அறநிலையத்துறை கோவில்களில், ஆறு ஆண்டுகளாக அறங்காவலர்களை நியமிக்காமல், அதிகாரிகளை தக்கராக நியமித்துள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முறைகேடுகளுக்கு வழி வகுப்பதால், புதிதாக பொறுப்பேற்றுள்ள அறநிலையத்துறை கமிஷனர், சிக்கலுக்கு முடிவு கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அறநிலையத்துறையின், 1959ம் ஆண்டு சட்டப்படி, கோவில் நிர்வாகத்தில் அறங்காவலர் குழுவுக்குத் தான் அதிகாரங்கள் உள்ளன. செயல் அலுவலரும், அறங்காவலர் குழுவின் கீழ், பணியாற்ற வேண்டும். தமிழகத்தில், ஆண்டு வருவாய், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள கோவில்களுக்கான அறங்காவலர்களை மாநில அரசு நியமிக்கும். அதற்கு குறைவாக வருவாய் உள்ள கோவில்களுக்கு, அறநிலையத்துறை கமிஷனரும், இரண்டு லட்சம் ரூபாய் வரை உள்ள கோவில்களுக்கு இணைக் கமிஷனரும் அறங்காவலர் குழுவை நியமிக்கலாம். இந்த குழுவின் பதவிக்காலம், இரண்டு ஆண்டுகள். ஆனால், ஆறு ஆண்டுகளாக அரசும், அறநிலையத்துறையும், அறங்காவலர்களை நியமிக்காமல் உள்ளது. இது, பல முறைகேடுகளுக்கு வழி வகுப்பதால், அறநிலையத்துறைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள கமிஷனர் ஜெயா, அறங்காவலர் நியமத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

இது குறித்து, ஆன்மிக நல விரும்பிகள் சிலர் கூறியதாவது: இடைக்கால ஏற்பாடு என, அறநிலையத்துறையை சேர்ந்தவர்களே, தக்கராக நியமிக்கப்படுகின்றனர். ஒரே அதிகாரி, 30க்கும் மேற்பட்ட கோவில்களில், தக்கராக இருந்து வருகிறார். அறநிலையத்துறை சட்டப்படி, இடைக்கால ஏற்பாடு என்பது, மூன்று மாதங்கள் மட்டுமே. ஆனால், ஆறு ஆண்டுகளாக இந்த இடைக்கால ஏற்பாடு தொடர்கிறது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திலும், கோவில் நிர்வாக அதிகாரம், அறங்காவலர்களிடம் தான் உள்ளது என, தவறான தகவல்களை அரசு கூறி வருகிறது. பக்தி நேயத்தோடு பார்க்க வேண்டிய கோவில்களை, பணம் காய்க்கும் இயந்திரமாக, அதிகாரிகள் கருதுகின்றனர்.முழு அதிகாரத்தையும், தங்கள் கையில் வைத்துக் கொள்ளவே, அறங்காவலர்களை நியமிக்காமல் உள்ளனர். அறநிலையத்துறை புதிய கமிஷனரும், தமிழக அரசும், உடனடியாக அறங்காவலர் நியமனம் செய்ய உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar