பதிவு செய்த நாள்
04
செப்
2017
12:09
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் உருத்திர கோட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான ராஜகோபுர திருப்பணி, நேற்று நடந்தது. திருக்கழுக்குன்றத்தில், வேதகிரீஸ்வரர் கோவில் புகழ்பெற்றது. அதன் துணை கோவிலான, புராதன உருத்திர கோட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலின் பாழடைந்த நிலை குறித்து, மே மாதம், நமது நாளிதழில் விரிவான படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் உபயதாரர்கள் ஆலோசித்து, கோவிலில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, திருப்பணி துவங்குவதற்கான பாலாலய பூஜையை, சிவாச்சாரியார்கள் நேற்று,கோவில் வளாகத்தில் நடத்தினர். வேதகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர்குமரன், மேலாளர் விஜயன் மற்றும் திருப்பணி குழுவினர் பங்கேற்றனர்.
இதுகுறித்து விழா குழுவினர்கூறியதாவது: உருத்திர கோட்டீஸ்வரர் கும்பாபிஷேகம், 16 ஆண்டுகளுக்கு முன் நடந்தது. மாதந்தோறும் பவுர்ணமி, பிரதோஷம், சஷ்டி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. தொன்மையான கோவில் சிறப்பை வெளி கொணரும் விதத்தில் கும்பாபிஷேக பணிகளை துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்: பழமையான இக்கோவிலுக்கு நிதி ஆதாரம் இல்லாத நிலை உள்ளது. உபயதாரர்கள் துவக்கியுள்ள இத்திருப்பணிக்கு, விரும்பும் பக்தர்கள் பணம் மற்றும் கட்டுமான பொருட்களை நன்கொடையாக வழங்கலாம்.