கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பூக்கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாளிகளின் கலாசார சிறப்பு பண்டிகையான ஓணம் நேற்று துவங்கியுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் திருவோணத்திற்கு முதல் நாளான உத்திராட நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பாரம்பரிய உடை அணிந்து, வீடுகளின் நுழைவாயில்களில் வண்ணப்பூ கோலமிட்டு, விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர். அதேபோன்று இரண்டாம் நாளான திருவோண தினத்தில் வண்ண மலர்களால் பூக்கோலம் வரைந்து மகாபலி சக்கரவர்த்தி மற்றும் வாமனன் உருவங்கள் வைத்து வழிபாடு நடக்கும். இதனையடுத்த கள்ளக்குறிச்சி பகுதியில் வசிக்கும் மலையாளிகள், தங்கள் வீடுகளின் முற்றங்களில் வண்ணப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை கொண்டாட துவங்கியுள்ளனர்.